Breaking News

பொத்தேரி அருகே ரயில் மோதி கர்ப்பிணி மனைவியும் கணவரும் பலி நடந்தது என்ன முழு விவரம் Pregnant wife and husband killed in train collision near Potheri

அட்மின் மீடியா
0

பொத்தேரி அருகே ரயில் மோதி கர்ப்பிணி மனைவியும் கணவரும் பலி நடந்தது என்ன முழு விவரம் Pregnant wife and husband killed in train collision near Potheri

பொத்தேரி அருகே 4 மாத கர்ப்பிணி பெண் உட்பட இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா  மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷரீப் ஆகிய இருவரும்  காதலித்து வந்த நிலையில்,  இருவீட்டு பெற்றோர்களும் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில், இருவரும் கேரளத்தில் இருந்து வேலைத் தேடி சென்னை புறப்பட்டு வந்துள்ளனர். 

Aishwarya from Kozhikode, Kerala and Mohammad Sharif from Malappuram were in love, but both their parents did not agree to their marriage, so both of them left Kerala in search of work in Chenna

 


சென்னையில் நண்பர் ஒருவர் உதவியுடன் வேலைத் தேடி வந்த இவர்கள், நேற்றிரவு, 8:30 மணியளவில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கும் பொத்தேரி நிலையத்திற்கும் இடையே பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முகமது ஷரீஃப் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். They were looking for work in Chennai with the help of a friend. They were trying to cross the tracks between Guduvancheri and Potheri stations last night at 8:30 pm when they were hit by a passing electric train. Mohammad Sharif died on the spot.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ஐஸ்வர்யா, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்‌. 

மேலும் உயிரிழந்த ஐஸ்வர்யா நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. 

Aishwarya, who was fighting for her life, was rescued and admitted to a private hospital in Potheri. Aishwarya, who was in the intensive care unit there, died in the hospital without treatment. It is also revealed that the deceased Aishwarya was four months pregnant.

இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதா ? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback