மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மரணமடைந்தார் sitaram yechury passed away
அட்மின் மீடியா
0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மரணமடைந்தார் sitaram yechury passed away
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் தானமாக வழங்கப்பட்டது!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பம் தானமாக வழங்கியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 72.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த யெச்சூரி, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு கவலைக்கிடமாக இருந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் அவரது உயிர் பிரிந்ததாக கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி மார்பு நோய் தொற்று சிகிச்சையும் சீதாராம் யெச்சூரிக்கு அளிக்கப்பட்டது.
Tags: இந்திய செய்திகள்