Breaking News

கர்ப்பிணி வயிற்றில் எலும்புக்கூடு கருத்தடை மாத்திரையால் விபரீதம் நடந்தது என்ன முழு விவரம் Skeletal birth control pills in pregnant women

அட்மின் மீடியா
0

கர்ப்பிணி வயிற்றில் எலும்புக்கூடு கருத்தடை மாத்திரையால் விபரீதம் நடந்தது என்ன முழு விவரம்  Skeletal birth control pills in pregnant women



ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாப்பள்ளியை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் அவர் கர்பமாகி உள்ளார் அதனை தொடர்ந்து மூன்றாவது குழந்தை வேண்டாம் என முடிவு செய்து மருந்து கடையில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு கரு பாதியளவு மட்டுமே கலைந்ததாகவும் இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டதால் மருத்துவமனை சென்ற பெண்ணின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது கருவில், குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் வயிறு இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்பு கூட்டை இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றினர்.இளம்பெண் என்பதால் பெரியளவில் பிரச்சனை இல்லாமல் சரி செய்யப்பட்டது என்றும், தற்போது அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கர்ப்பத்தடை மாத்திரைகளை தானே உட்கொள்வது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback