Breaking News

141 பயணிகளுடன் ஏர்இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தொழில்நுட்பக் கோளாறால் திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்த ஏர்இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது நடந்தது என்ன முழு விவரம்


திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613)  விமானம் பறக்கத் தொடங்கியவுடன் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது இதனால் சுமார் 2 மணிநேரமாக விமானத்தை தரையிறக்க முடியாமல் 141 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது

திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப கோளாறால் சிறிது நேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது  

திருச்சியில் 141 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம்... திக் திக் வீடியோ பார்க்க trichy flight landing

https://www.adminmedia.in/2024/10/141-trichy-flight-landing.html

                                           

விமானம் தீப்பற்றுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது

அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது,

நிலத்திலிருந்து 4,255 அடி உயரத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

விமானி Iqrom Rifadly Fahmi Zainal விமானத்தை பத்திரமாக இயக்கி வெற்றிகரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார். 

தரையிறங்கும்போது விமானத்தில் புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback