மாமல்லபுரத்தில் நோ எண்ட்ரியில் சென்ற காரைத் தடுத்த காவலாளியை சராமாரியாக தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிர்ச்சி வீடியோ
மாமல்லபுரத்தில் நோ எண்ட்ரியில் சென்ற காரைத் தடுத்த காவலாளியை சராமாரியாக தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிர்ச்சி வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சுற்றுலா சென்ற இடத்தில் ஐந்துரதம் அமைந்துள்ள பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நோ பார்க்கிங் வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்திய வாகன நிறுத்துமிட காவலரை காரில் சென்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்
நோ பார்க்கிங் வழியாக காரை பார்க் செய்ய செலும்போது அங்கு பணியிலிருந்து தனியார் காவலர் ஏழுமலை என்பவர் இது நோ பார்க்கிங் ஏரியா... தவிர நோ எண்ட்ரி வழியாக செல்லக் கூடாது என்று கார் பார்க்கிங் செய்யும் இடத்தைக் காட்டி காரை வழி மறித்து நின்றுள்ளார்.
அப்போது காரிலிருந்து இறங்கிய 2 பெண்கள் ஆவேசமடைந்து, சாலையின் நடுவே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், காரில் உடன் வந்த 2 ஆண்களும் அவர்களுடன் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினார்கள் இந்த சம்பவத்தை, அந்த வழியாக சென்ற மற்றொரு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமுக வலைதளத்தில் வைராலாகி வருகிறது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நால்வர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்
வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் யாரென கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1848548104553042112
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ