Breaking News

தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு பதில் கவரிங் நகை -533 சவரன் தங்கம் மோசடி வங்கி மேளாளர் உள்பட 4 பேர் கைது

அட்மின் மீடியா
0

தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு பதில் கவரிங் 533 பவுன் தங்கம் மோசடி வங்கி மேளாளர் உள்பட 4 பேர் கைது

காரைக்குடி அருகே உள்ள ஐசிஐசிஐ வங்கியில் வாடிக்கையாளர்களின் ரூ.2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்:-


கல்லல் பகுதியில் செய்லபடும் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகள் குறித்து மண்டல மேலாளர் தலைமையில் வங்கியில் நடைபெற்ற ஆய்வின்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது

காரைக்குடியில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரிஜினல் நகைக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் உள்ள  ஐசிஐசிஐ தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் நகை அடமானம் வைத்துள்ளனர்.இந்நிலையில் வங்கியில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆய்வில் வங்கியின் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். நகைகளை ஆய்வு செய்த போது சந்தேகம் வரவே நகைகள் பரிசோதணை செய்யப்பட்டதில் தங்க நகைக்கு பதில் அதே போல் கவரிங் நகைகள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதில் மொத்தம் 533 பவுன் நகைகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டிருந்தது. 

இது குறித்து மண்டல மேலாளர் கிருஷ்ணக்குமார் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். 

அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கல்லல் வங்கி மேலாளர் பட்டுக்கோட்டையை அருகே கோட்டைக்குளம் மேலமேட்டை சேர்ந்த விக்னேஷ்(34), உதவி மேலாளர் காளையார்கோவில் அருகே புலிக்கண்மாயை சேர்ந்த ராஜாத்தி(39), மோசடிக்கு உதவி செய்த இதே ஊரைச்சேர்ந்த ரமேஷ்(38), சதீஷ்(21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback