Breaking News

அஞ்சலகத்தில் 555 ரூபாய்க்கு 10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு முழு விவரம் post office insurance scheme

அட்மின் மீடியா
0

post office insurance scheme  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755-ல் ரூ.10 லட்சம்/ ரூ.15 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. post office insurance schemes in tamil

இது குறித்து வெளியான் அறிவிப்பில்:- 

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிகக் குறைந்த பிரீமியத் தொகையுடன் கூடிய இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். 

விண்ணப்பப் படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகிதப் பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தைப் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்தப் பாலிசி வழங்கப்படும் 

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:- 

ரூ.10 லட்சம்/ 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு/நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம்) 

ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி 

விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை) 

விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) 

கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை 

விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை 

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்) 

விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை. ஆண்டிற்கு வெறும் ரூ.555-ல்/ரூ.755-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் 

இந்த விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/தபால்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெற தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும் 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2033379

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback