Breaking News

வீட்டிலேயே லேப் அமைத்து போதைப் பொருள் தயார் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

வீட்டிலேயே லேப் அமைத்து போதைப் பொருள் தயார் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது முழு விவரம்

கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் பிரவீன் இவரது வீட்டுக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நபர்கள் சிலர் வந்து செல்வதாகவும், போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் கொடுங்கையூர், பிண்ணி நகர் பிரதான சாலையில் உள்ள பிரவீன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

அப்போது, வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து  மெத் ஆம்பெட்டமைன் எனும் போதை பொருள் தயாரித்து வந்தது தெரியவந்தது.இது தொடர்பாக பிரவீன் பிரனவ், 21, மீஞ்சூர் கிஷோர், 21, ஞானபாண்டியன், 22, கோலப்பஞ்சேரி நவீன், 21, மணலி தனுஷ், 23, தேனாம்பேட்டை பிளமிங் பிரான்சிஸ், 21, செங்குன்றம் அருண்குமார், 38, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

மேலும், மாணவர்களிடம் இருந்து 245 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மற்றும் எடை போடும் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். இரண்டு லேப்டாப், 7 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளன விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் பிரவீன் பிரணவ், கிஷோர், தனுஷ் மற்றும் நவீன் ஆகிய நான்கு பேரும் சென்னையில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருவதாகவும் ஞானபாண்டியன் என்பவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் வேதியல் பட்டப்படிப்பில் முதுகலை பிரிவில் படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback