Breaking News

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு! தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னையில் உள்ள 'அம்மா' உணவகங்களில் இன்றும் நாளையும் விலையின்றி உணவு வழங்கப்படும் கனமழை பெய்துள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback