Breaking News

மதரஸாக்களுக்கு கொடுக்கும் நிதியிணை நிறுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உத்தரவிற்க்கு உச்சநீதிமன்றம் தடை

அட்மின் மீடியா
0

மதரஸா பள்ளிகளை மூட பரிந்துரை செய்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உத்தரவிற்க்கு உச்சநீதிமன்றம் தடை

மதரஸாக்களுக்கு கொடுக்கும் நிதியிணை நிறுத்த உத்தரவிட்ட NCPCR-ன் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மதரஸா மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும், மதரஸா பள்ளிகளை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன அதன்பின்பு மதரஸா கல்வி நிலையங்களை மூட வேண்டும் எனக் கூறவில்லை ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கப்பட வேண்டும் என்றே பரிந்துரைத்தோம்’ என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) தலைவா் பிரியங்க் கனூங்கோ தெரிவித்திருந்தார்

அதனைத் தொடர்ந்து உத்திரபிரதேசம், திரிபுரா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவுவிட்டது. மேலும் இதனை செயல்படுத்த உத்தரவிட்ட உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback