Breaking News

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் இன்றும் நாளை எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், முழு விவரம் இதோ



சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இன்று 15.10.2024:-

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

ரெட் அலர்ட்:-

திருவள்ளூர், 

சென்னை, 

செங்கல்பட்டு 

மற்றும் காஞ்சிபுரம் 

மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், 

ஆரஞ்சு அலர்ட் :-

வேலூர், 

இராணிப்பேட்டை, 

திருவண்ணாமலை, 

விழுப்புரம், 

கடலூர், 

மயிலாடுதுறை, 

திருவாரூர்,

நாகப்பட்டினம். 

ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிகு இடங்களில் கன முதல் மிக கனமழையும், 

மஞ்சள் அலர்ட்:-

கிருஷ்ணகிரி. 

திருப்பத்தூர் 

தர்மபுரி. 

சேலம் 

கள்ளக்குறிச்சி 

திருச்சிராப்பள்ளி, 

பெரம்பலூர், 

அரியலூர், 

தஞ்சாவூர் 

மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

நாளை 16.10.2024:-

வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

ரெட் அலர்ட்:-

திருவள்ளூர், 

சென்னை, 

செங்கல்பட்டு 

மற்றும் காஞ்சிபுரம் 

ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், 

ஆரஞ்சு அலர்ட் :-

வேலூர், 

இராணிப்பேட்டை, 

திருவண்ணாமலை, 

கள்ளக்குறிச்சி, 

பெரம்பலூர், 

அரியலூர், 

மயிலாடுதுறை, 

தஞ்சாவூர், 

திருவாரூர், 

நாகப்பட்டினம், 

கடலூர், 

விழுப்புரம் 

ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

மஞ்சள் அலர்ட்:-

கிருஷ்ணகிரி 

திருப்பத்தூர் 

தர்மபுரி, 

சேலம், 

திருச்சிராப்பள்ளி 

மற்றும் புதுக்கோட்டை 

ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

நாளை மறுநாள்:-

17.10.2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback