Breaking News

மது போதையில் போலீசாரை அவதூறாக பேசிய நபர் மன்னிப்பு கேட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

மது போதையில் போலீசாரை அவதூறாக பேசிய நபர் மன்னிப்பு கேட்ட வீடியோ



சென்னை கடற்கரை பகுதியில் குடிபோதையில் நள்ளிரவில் காரை நிறுத்திய ஜோடியிடம் ரோந்து போலீசார் விசாரித்தபோது, உதயநிதியை கூப்பிடவா என கேட்டு அவர்கள் காவலர்களை இழிவாக பேசிய வீடியோ வைரலானது. இதனையடுத்து மயிலாப்பூரில் விடுதி எடுத்து தங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார், போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்

இந்நிலையில் போலீசை இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது சென்னை காவல்துறை. அந்த வீடியோவில் அவர், அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததால் நிதானம் இல்லாமல் காவல்துறையினரை தகாத வார்த்தையால் பேசிவிட்டேன். இனி இதுபோல் பேசமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848386726592667904

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback