Breaking News

வயதின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய ஆதார் கார்டை ஏற்றுக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

வயதின் உண்மைத் தன்மையை உறுதி செய்ட ஆதார் கார்டை ஏற்றுக்கொள்ள முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் அட்டையை பயன்படுத்த முடியும் என உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2015-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நபருக்கு இழப்பீடாக ரூ.19.35 லட்சத்தை வழங்க எம்ஏசிடி உத்தரவிட்டது. 

உயிரிழந்தவரின் வயதை தவறாக கணக்கிட்டு எம்ஏசிடி இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறி இழப்பீட்டை ரூ.9.22 லட்சமாக குறைத்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பளித்தது. 

உயிரிழந்தவரின் ஆதாா் அட்டையில் அவரின் வயது 47 என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உயா்நீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் அவரின் வயதை 45-ஆகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயன் ஆகியோா் அடங்கிய அமா்வு நேற்று வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, ‘

மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடந்த 2018, டிசம்பா் 20-ஆம் தேதி வெளியிட்ட அலுவலக குறிப்பாணையை சுட்டிக்காட்டி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கை எண் 8-இல், ‘ஒருவரின் அடையாளத்தை கண்டறியவே ஆதாா் அட்டை பயன்படுத்தப்படுவதாகவும் அதை பிறந்த தேதிக்கானஆவணமாக எடுக்கக்கூடாது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆதாரை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். வயதுக்கான சான்றாக எடுத்துக்கொள்ள கூடாது என்றே அரசின் அறிவிக்கை கூறுகிறது” விபத்து இழப்பீடு வழக்கில் ஆதாரை வயதுக்கான சான்றாக ஏற்றுக்கொண்டு பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback