கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதன் விவரம்
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. தேசிய மீட்புக் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு தற்போது வாயுக் கசிவு ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்