Breaking News

இந்து அறநிலையத் துறை, இஸ்லாமிய வக்பு வாரியம் போல் கிறிஸ்தவ சொத்துகளை நிர்வகிக்க வாரியம் அமைக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை

அட்மின் மீடியா
0

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் நியமனம் தொடர்பான வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் கருத்து 


 

கிறிஸ்தவ நிறுவனங்கள் கல்வி, மருத்துவம் போன்ற பல பொதுச்சேவைகளை மேற்கொள்கிறது என்பதை மறந்துவிட முடியாது. அந்நிறுவனங்களின் சொத்துகள், நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இதை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்.

கோயில் சொத்துகளை பாதுகாக்க அறநிலையத்துறையும், பள்ளிவாசல் சொத்துகளை பாதுகாக்க வக்பு வாரியம் உள்ளதுபோல், கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் நீதிபதி ஒன்றிய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரை வழக்கில் இணைத்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எனவும் அடுத்த விசாரணை நவ.18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்று நிதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback