Breaking News

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் பிரம்பால் மாணவர்களை அடித்து சித்ரவதை வைரலாகும் வீடியோ

அட்மின் மீடியா
0

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் பிரம்பால் மாணவர்களை அடித்து மாணவர்கள் சித்ரவதை வைரலாகும் வீடியோ

சிசிடிவி ஆதாரங்களுடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றார்கள்

 


காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது

திருநெல்வேலியில் உள்ள Jal Neet Academy என்ற பெயரில் இயங்கிவரும் நீட் பயிற்சி மையத்தில் ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதாக கூறி அந்த மாணவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக அடித்த தாக நீட் பயற்சி மைய உரிமையாளர் ஜலாலுதினீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக் கூறி, காலணியை மாணவி மீது வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் மேலும் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நீட் பயிற்சி மையத்தில் ஆய்வு நடத்தியுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1847232807904375029

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback