Breaking News

மதுரையில் கணவர் கண் முன்னே பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயினை பறித்த கொள்ளையர்கள் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

மதுரையில் கணவர் கண் முன்னே பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயினை பறித்த கொள்ளையர்கள் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ

மதுரை பந்தடி பகுதியை சேர்ந்தவர்கள் துவாரகநாத் -மஞ்சுளா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி ஷாப்பிங் முடித்துவிட்டு இருசக்கவர வாகனத்தில் இரவு வீடு திரும்பியுள்ளனர்.

கணவர் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்திய போது மஞ்சுளா வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்  மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முற்பட்டனர்.

அப்போது மஞ்சுளா செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மஞ்சுளவை தர தரவென சிறிது தூரம் ரோட்டில் இழுத்து கொண்டே பைக்கில் வேகமாக சென்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக தெற்கு வாசல் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தினுடைய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848906823191110102

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback