Breaking News

தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள குறைதீர் முகாம் முழு விபரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம்மாதந்தோறும் நடத்தப்படுகிறது.  அதன்படி, ஜூலை மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் அக்டோபர் 19 ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். 

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகம் தொடர்புடைய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று 

இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். 

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback