Breaking News

சென்னை பட்டினப்பாக்கத்தில் மது போதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய ஜோடி கைது!

அட்மின் மீடியா
0

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை ஆபாசமாக பேசிய போதை ஜோடி கைது!

சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய ஜோடி கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் 

சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. 



சென்னை மெரினா கடற்கரையில் பொறுத்தவரை காமராஜர் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்வதற்காக மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக லூப்சாலையில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு காரை எடுக்க கூறிய ரோந்து போலீசாரிடம் மதுபோதையில் இருந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி மிரட்டல் விடுத்தனர் மேலும் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஏளனமாக பேசி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடந்ர்து மைலாப்பூர் போலீசார் வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன், அவருடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்த அவர்களிடம் மயிலாப்பூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1848323769800261818

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback