Breaking News

பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஆயுதப்படை காவலர் கைது!

அட்மின் மீடியா
0

வீட்டில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஆயுதப்படை காவலர் கைது!



சென்னை மதுரவாயல், ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவருடன் வசித்து வரும் 32வயது இளம்பெண் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்

இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் நீ இங்கு விபச்சாரம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் உன்னை கைது செய்ய வந்துள்ளேன் ரூ.1 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என கூறி அவரை மிரட்டியுள்ளார்

அந்த பெண் அருகில் உள்ள .டி.எம் மையத்திற்கு சென்று பணம் எடுத்து வரச்சொல்லி தனது கணவரை அனுப்பி வைத்தார். அப்போது இளம்பெண்ணை மிரட்டி படுக்கையறைக்கு அழைத்து சென்று மர்ம நபர் அவரை கற்பழித்துள்ளார்

சிறிது நேரத்தில் பணத்துடன் திரும்பிய இளம்பெண்ணின் கணவரிடம் இருந்து 65 ஆயிரம் பணத்தை பறித்த மர்ம நபர், மீண்டும் வருவேன் மீதி பணத்தை தயாராக வை என மிரட்டி சென்றுள்ளார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் விசாரனையில் இறங்கிய போலீசார் திருவான்மியூரை சேர்ந்த பணியில்  சஸ்பெண்டு ஆன ஆயுதப்படை போலீஸ்காரரான பாவுஷா (வயது28) என்பது தெரிந்தது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback