Breaking News

வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத,காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திறன்பேசி பெற தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், UDID அட்டை ஆதார் அட்டை மற்றும் இளங்கலை கல்வி/முதுகலைக்கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் அதற்கான உரிய சான்றுகளுடன் ஒருவார காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/09/2024093061.pdf

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback