புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை 'வா.. வா..' என கூச்சலிட்டு சீண்டியதால் வெளியே வந்து மூவரையும் தாக்கிய வைரல் வீடியோ
புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை 'வா.. வா..' என கூச்சலிட்டு சீண்டியதால் வெளியே வந்து மூவரையும் தாக்கிய வைரல் வீடியோ
மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாதோல் மலைப்பகுதியில் சுற்றுலா சென்றபோது நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23) மற்றும் நந்தினி சிங் (25) ஆகிய 3 நண்பர்களும் தனியாக உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தபோது.
அந்த மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது , உடனடியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் சிறுத்தையை "வா.. வா.." என்று அழைத்து கத்தி கூச்சல் போட்டுள்ளார்கள் அப்போது திடீரென சிறுத்தை உண்மையிலேயே பாய்ந்து வந்து அவர்களை கடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. இதனையடுத்து சுற்றுலா வந்த மற்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இளைஞர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1848995510407074147
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ