ஈசிஆரில் கழிவு நீர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி நடந்தது என்ன முழு விவரம்
கழிவு நீர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி நடந்தது என்ன முழு விவரம்
செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு மாணவி கேத்தரின், 19, லிஸ்வந்தி, 19. நண்பர்களான இருவரும், நேற்று, இ.சி.ஆரில் இருந்து, ஓ.எம்.ஆர் நோக்கி இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
கேத்தரின் வாகனத்தை ஓட்டினார் பக்கிங்ஹாம் கால்வாய் பாலத்தில் செல்லும்போது விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த பைக்கிற்கு வழிவிட வலது பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியது. இதில் கேத்தரின் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயமடைந்த லிஸ்வந்தி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரி ஓட்டுனரை தேடுகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்