அரக்கோணத்தில் சோகம் - வீட்டில் மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பலி முழு விவரம்
வீட்டின் சுவரில் ஈரம் மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பலி முழு விவரம்
அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் வசிப்பவர் சபீர். இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது மகன் ரிஸ்வான்(12). இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
நேர்று மதியம் வீட்டில் உள்ள சுவிட்டை போடும் போது அப்போது மழையினால் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டு துடிதுடித்துள்ளார். உயிருக்கு போராடிய சிறுவன் ரிஸ்வானை உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்
தகவலறிந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்து மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
Tags: தமிழக செய்திகள்