தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைப்பு! முழு விவரம்
தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைப்பு! முழு விவரம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
திருவாரூர்
ராமநாதபுரம்
திண்டுக்கல்
விழுப்புரம்
புதுக்கோட்டை
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
கடலூர்
அரியலூர்
ராணிப்பேட்டை
கரூர்
வேலூர்
திருவண்ணாமலை
தூத்துக்குடி
திருப்பத்தூர்
திருநெல்வேலி (5ம் வகுப்பு வரை)
ஆகிய 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் விடுமுறை விடப்பட்ட 21 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
6 முதல் 9ம் வகுப்புகளுக்கு இன்று ஆங்கில தேர்வு நடைபெற இருந்தது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், கனமழை காரணமாக வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags: தமிழக செய்திகள்