Breaking News

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.அதில் 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

இந்த தீர்மானத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதினோம். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளோம். நாடாளுமன்றம் கூடும் நேரத்தில் எல்லாம் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 

திமுக அரசு எந்த காலத்திலும் அலட்சியமாக இருந்ததில்லை. ஏலம் விட்டாலும் சரி, ஒருபோதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என கூறினார். இதனிடையே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால், இந்த முதல்வர் பொறுப்பில் நான் இருக்கமாட்டேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback