இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்தை கேட்டு முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என திண்டுகல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்தை கேட்டு முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரனின் அமமுக என பல பிரிவுகளாக பிரிந்து உள்ளது
இந்நிலையில் அதிமுக சின்னம், கொடி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.
இந்த நிலையில், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பம் மீது ஓபிஎஸ் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு மீது தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்