நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் அதனை கண்காணிக்க வேண்டும் திருச்சி எஸ்பி பகீரங்க குற்றசாட்டு!
நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் அதனை கண்காணிக்க வேண்டும் திருச்சி எஸ்பி பகீரங்க குற்றசாட்டு!
சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று, சைபர் கிரைம், இணையதள மிரட்டல் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று சண்டிகரரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். அது கண்காணிக்கப்பட வேண்டும். இதனால் நானும் எனது குடும்படும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது இணைய குற்றங்களை செய்யும் கூலிப்படைகளை கண்காணிக்க 14 சி எனும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையேயான உரசல்கள் ஊர் அறிந்தது. எஸ்.பி வருண்குமாரின் குடும்பத்தை சிலர் அவதூறாக பேசியதும், அவருடைய மனைவி புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டேவையும் அவதூறாக பேசியதையும் தொடர்ந்து, அந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்