Breaking News

அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது என அமித்ஷா சர்ச்சை பேச்சு வீடியோ இதோ

அட்மின் மீடியா
0

இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என நாடாளுமன்றத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு.



நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது 

அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கர் புகைப்படத்துடன் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று “ஜெய்பீம்! ஜெய்பீம்” என முழக்கமிட்டனர். மேலும், “மத்திய அமைச்சர் அமித்ஷாவே! மன்னிப்பு கேளுங்கள்” எனவும் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கோஷமிட்டனர்.இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1869296649434263677

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback