சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஓர் புதிய வழக்கில் கைது!
யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஓர் புதிய வழக்கில் கைது!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் அவர் தனது உதவியாளர், டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைபொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த நிலையில், ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தற்போது அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் கைது செய்யப்பட்டார். தூய்மை பணியாளர், தமிழக அரசு வெளியிட்ட திட்டம் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்