காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் மரணம்
அட்மின் மீடியா
0
காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ். இளங்கோவன் காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான EVKS இளங்கோவன் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் அவர் மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார்
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இவர் சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.
1984ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் 2004 மக்களவை தேர்தலில் கோபி., தொகுதியில் வென்று, 2009 வரை மத்திய இணையமைச்சராக செயலாற்றினார்
2000-02, 2014 - 16 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார்
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா 2023ம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவால் அத்தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் மறைவையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது !
காங்கிரஸ் கட்சியின் கம்பீரமான, பிரமாண்டமான குரலாக ஒலித்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.. தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரிய இழப்பு”காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்