Breaking News

குடியரசு தின அலங்கார ஊர்தி..அனுமதி மறுக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மை என்ன

அட்மின் மீடியா
0

குடியரசு தின அலங்கார ஊர்தி.. அனுமதி மறுக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மை என்ன?

பரவும் செய்தி:-

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தகவல் பரவுகின்றது

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்

குடியரசு தின விழாவில்,தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி AIADMK ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு,ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன் mkstalinஅரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.என பதிவிட்டுள்ளார்

இது குறித்து தமிழக உண்மை சரிபார்ப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். 

ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது.2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது.வதந்தியைப் பரப்பாதீர்!

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback