Chennai Book Fair 2025 சென்னை புத்தகக்காட்சி 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் முழு விவரம்
Chennai Book Fair 2025 சென்னை புத்தகக்காட்சி 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் முழு விவரம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 48 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2025 சென்னை நந்தனம் சிஎம் மைதானத்தில் நடைபெற உள்ளது
48 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 27/12/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் தொடங்கி வைத்து 12/01/2025 வரை நடைபெற உள்ளது.
இத் துவக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் அவர்கள் முத்தமிழறினார் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள் புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 11 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
• மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
•அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது. · பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்த புத்தக கண்காட்சியில் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.
அதேபோல் மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் , எழுத்தாளர்கள் உரை நடைபெறும்.
அத்துடன் புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி. டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள்.
இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON B SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்ற நீதிபதி) அவர்கள் விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்