அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது
அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 6 பேர், நேற்றைய தினம் (24.2.2025) குழந்தைகள் உதவி மற்றும் புகார் எண்ணான 1098 க்கு புகார் அளித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், கணினி தேர்வின்போது 6 மாணவிகளுக்கும் தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த உத்தங்கரையை சேர்ந்த தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபுவை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags: தமிழக செய்திகள்