மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் முழு விவரம்
மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கட்டணம் முழு விவரம்
வங்கிகள் மாதத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் பலனை வழங்குகின்றன. இது தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதம் மூன்று முறை பணம் எடுக்கலாம். கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் புதிய வங்கி விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதில் முக்கியமாக மே 1-ம் தேதி முதல் ஏடிஎம் மூலம் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.23 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஏடிஎம்களை அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள், இது பணம் எடுக்கும் செலவை அதிகரிக்கும்.
வங்கியில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுக்கும்போது சேவை கட்டணம் என்ற பெயரில் சிறிய தொகையை வங்கிகள் பிடித்தம் செய்து வந்தன.இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பிடிக்கப்படும் சேவை கட்டணத்தை அதிகரித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மூலம் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 21 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் 23 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி