நிறுத்ததில் அரசு பேருந்தை நிறுத்தாததால் நீண்ட தூரம் பின்னால் ஓடிய +2 மாணவி வைரலாகும் வீடியோ
நிறுத்ததில் அரசு பேருந்தை நிறுத்தாததால் நீண்ட தூரம் பின்னால் ஓடிய +2 மாணவி வைரலாகும் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் +2 மாணவி துரத்தி சென்று பேருந்தில் ஏறிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1904401895743009101
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
25/03/2025 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியில் "பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி" எனும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது"
மேற்படி தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ள பேருந்து எண் TN32N2389, தடம் எண் 1C. வேலூர் மண்டலம், ஆம்பூர் கிளையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தாகும்.
இன்று காலையில் இப்பேருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நடை எடுத்து ஆலங்காயம் செல்லும் வழியில் கொத்தகோட்டை கிராமம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறுவதற்காக பள்ளி மாணவி ஒருவர் கைக்காட்டிய நிலையிலும் பேருந்தை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று பேருந்தினை நிறுத்தி மாணவியை பேருந்தில் ஏற்றியுள்ளார். மாணவி பேருந்தில் ஏறுவதற்காக பேருந்தின் பின்னால் ஓடிச்சென்ற காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஆம்பூர் பணிமனையை சார்ந்த பேருந்து ஓட்டுநர் திரு.முனிராஜ் பணி எண் 42069 உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது துறைரீதியான தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ