Breaking News

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து விமர்சித்த வன்னியரசு - கடும் கண்டனம் தெரிவித்த தவெக

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்தது. 



இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு விமர்சித்த விதம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது தனக்கு முஸ்லிம்களின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு கூறியுள்ளது. இதற்கு தமிழக வெற்றி கழகம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

தமிழக வெற்றிக்கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி எங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக எள்ளளவும் அறமற்ற அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் சகோதரர் திரு.வன்னியரசு அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. வன்னியரசு அவர்களுக்கு கண்டனம்!

இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி எங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக எள்ளளவும் அறமற்ற அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் சகோதரர் திரு.வன்னியரசு அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் கழகத்தின் மாநிலக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த என்னை நியமனம் செய்தவர் எங்கள் தலைவர்!

கழகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தவர் எங்கள் தலைவர்!

கல்வி விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவர்கள் பலருக்குப் பரிசளித்துப் பாராட்டியவர் எங்கள் தலைவர்!

CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் எங்கள் தலைவர்!

எங்கள் தலைவர் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் நீங்கள் பேசியுள்ள அப்பட்டமான பொய்யின் வாயிலாக ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் ஏதோ தமிழகத்தில் உள்ள தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் போலச் சித்திரித்து அவமரியாதை செய்துள்ளீர்கள். இதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க.வின் ஊதுகுழலாக இத்தகைய பொய்யினைச் சர்வ சாதாரணமாகப் பேசும் நீங்கள். நாங்கள் பெருமதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தங்கள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும் அவப்பெயரைத் தேடிக் கொடுத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர்.

இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் எங்கள் தலைவர்!

இஸ்லாமிய மக்களும் எங்கள் தலைவரைத் தங்கள் மனத்தில் வைத்து மதிப்பவர்கள்! உங்களை ஏவிவிடுவோரின் பொய், புரட்டுகளால் ஒருபோதும் இதனை மாற்றவோ மறைக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் இது போன்று அநாகரிகமான முறையில் இஸ்லாமிய மக்களை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்து, நாகரிக அரசியல் பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள்.

இப்படிக்கு,

திருமதி. 1.தாஹிரா,

கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்,

தமிழக வெற்றிக் கழகம்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback