Breaking News

மே மாதம் உள்ளாட்சி இடைதேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்க்கு மே மாதம் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல்/இடைக்கால தேர்தல்கள் குறித்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடக்கம்

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல்/இடைக்கால தேர்தல்களை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலிப் பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 133 காலிப்பதவியிடங்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை (Casual/Mid-Term Elections) எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. 

மாவட்ட அளவில் மேற்படி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback