மத உரிமையை பாதிக்கும் வக்ஃபு திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
மத உரிமையை பாதிக்கும் வக்ஃபு திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.இந்த தீர்மானத்தின் போது பேசிய அவர், இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்ஃபு சட்டத்திருத்தம் இருக்கிறது. வக்ஃபு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். சட்டத்திருத்தத்தின் மீது எதிர்கட்சிகள் சொன்ன திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்துள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த முன் வடிவினை மத்திய முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பேசினார்.
Tags: அரசியல் செய்திகள்