இனி வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வராது.. இனி கிளாம்பாக்கம் வரைதான் முழு விவரம்
இனி வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வராது.. இனி கிளாம்பாக்கம் வரைதான் முழு விவரம்
சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தென் மாவட்ட பேருந்துகள் இனி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில்
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல்துறை வழங்கி உள்ள பரிந்துரையின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று மார்ச் 4-ம் தேதி முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுவரை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 589 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக 14 பேருந்துகள் 816 பயண நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்