Breaking News

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட மசூதிகள் வைரல் புகைப்படங்கள் mosques covered holi

அட்மின் மீடியா
0

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட மசூதிகள் வைரல் புகைப்படங்கள்

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், இந்துக்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடும் அதே வேளையில், இஸ்லாமியர்கள் தொழுகையை மேற்கொள்வார்கள். 

சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு, ரோந்து மற்றும் கண்காணிப்புக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள மசூதி ஒன்று வண்ணம் பூசப்படாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. 

இது குறித்து மசூதியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹாஜி முகமது இக்பால் கூறுகையில் “நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மசூதியில் யாரும் வண்ணம் அல்லது அழுக்கை வீசக் கூடாது என்பதற்காக மசூதியை தார்ப்பாய் கொண்டு மூடுகிறோம்.

மேலும் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் ”என கூறியுள்ளார். 

கடந்த சில வருடங்களாகவே, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு வந்ததில் இருந்தே சுமார் 6, 7 ஆண்டுகளாக ஹோலி பண்டிகை நேரங்களில், பதற்றமான பகுதியில் உள்ள மசூதிகள் எந்த அத்துமீறல்களிலும் சிக்கி விட கூடாது என்பதற்காக, இப்படி தான் தார்பாய் கொண்டு மூடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘சவுபாய்’ என்ற பேரணி நடைபெறவுள்ளது.இந்த பேரணி செல்லும் பாதையில் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. தற்போது இந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், “சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback