கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்கவேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்கவேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
சாதிப் பெயரை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்
சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது .அனைத்து பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்
அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களை மாற்ற வேண்டும்
அரசு பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும்; சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது
பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் சாதிப் பெயர் கூடாது
சாதிப் பெயர்களை திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி நிறுவனங்களிலுள்ள பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும், அவர்களின் சாதி இருக்கக் கூடாது. அரசு நடத்தும் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசுப்பள்ளி என்று பெயர் சூட்டவும் உத்தரவிட்டுள்ளது
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள சங்கங்கள், சாதிப் பெயரை நீக்கி திருத்தம் செய்வேண்டும். இல்லையெனில் அவற்றை சட்டவிரோதமானவை என அறிவித்து பதிவை ரத்து செய்யுங்கள் என கூறினார்.
Tags: தமிழக செய்திகள்