Breaking News

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் போக்சோவில் கைது

அட்மின் மீடியா
0

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் போக்சோவில் கைது


தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (35). இவர் கோவை ஜி. என். மில்ஸ் வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆய்வாளர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி இருந்தார். அவரை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் 3 பணிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். 

தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் மூணாறில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இதையடுத்து அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback