Breaking News

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு முழு விவரம்

சிறுமிகளை பாலியல் தாக்குதல் செய்த புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜ் (37) மீது கோவை மாநகரப் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு. தலைமறைவாக உள்ளவரை தேட தனிப்படை அமைப்பு

கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த பார்ட்டியில், 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள சபையை சேர்ந்த போதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் எழுந்தது. 

புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback